Sunday, July 17, 2011

அனுபவ ஜோதிடம்: கருப்பு ஆடு இதோ!

அனுபவ ஜோதிடம் , நிர்வாண உண்மைகள் வாசகர்களுக்கு இந்த அய்யரை  நினைவிருக்கோ இல்லையோ.

பூசையறையில் பேண்டு வச்சாப்ல ஒரு அச்சு பிச்சு அனானியாவும் - - விதவிதமான பொய் பேர்லயும் கடைசியில  முருகேசன் அண்ணன் பேர்லயும்   கமெண்ட் போட்டு   அலப்பறை பண்ணின்டிருந்ததே அந்த கருப்பு ஆட்டை கண்டே புடிச்சுட்டன்.

அண்ணன் கிட்டே சொன்னா "கண்டுபிடிச்சு ஊருக்கு சொல்லி என்ன ஆகப்போகுது ? ஏற்கெனவே லட்சங்கள்ள கடன் .. அந்த மன்சன் செய்ற தொழிலுக்கு இதெல்லாம் ஊருக்கு தெரிஞ்சா பொழப்பு நாறிடும். நாம கண்டுபிடிச்சுட்டோம்னு சொன்னாலே போதும் அடங்கிரும்"னு தத்துவம் பேசினாரு.

இந்த கான்வர்சேஷன்லாம் அண்ணனோட ஆத்துல நடக்குது. அண்ணன் அப்ப ப்ளாகரையும் - அனுபவஜோதிடத்தையும் திறந்து வச்சிருந்தாரு.  நான் வந்ததும் சூடா காஃபி கொடுத்து தம் போட கம்ப்யூட்டரை விட்டு எழுந்தாரு. சைக்கிள் கேப்ல கண்ணு விட்டேன்.  பார்த்தா ஸ்பம்ல ஒத்தெழுத்து நாத்தத்துல கமெண்டுகள். எனக்கு நவத்வாரத்துலருந்தும் புகை வ்ந்துட்டுது.

"இல்லண்ணே அவன் திருந்தமாட்டான். ஒரே ஒரு பதிவு நான் போடறேன்" னு கேட்டேன். அண்ணன் ஒத்துக்கலை.

அவனாலே எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. பி.ஆர்.ஓ கணக்கா பப்ளிசிட்டிதான் தரான். என்னால அவனுக்கு எந்த நஷ்டமும் வரக்கூடாதுன்னு அடிச்சு சொல்லிட்டாரு.

தன் இதயத்துலயே  இந்த பாவிக்கு இடம் கொடுத்த அண்ணன் சைட்ல இடம் கேட்டா  அனுமதிக்கலை. எனக்கு மனசு கேட்கலை. அதனாலதான் அண்ணன் வஞ்சாலும் பரவால்லைனு இந்த பதிவை போடறேன்.

அந்தாளு யாருன்னு  கண்டு பிடிச்சாச்சுன்னு சொன்னா அவன்  நம்பலை போல. அந்த ப்ராசஸை சொல்றேன் பாருங்க.

நான் வச்சிருந்து அண்ணனை திட்டி தீர்த்த ப்ளாக் பேரு ayyarthegreat ( நன்னா கவனிங்கோ ayy பக்கத்துல ar வரும். ஆனால் நான் என் ப்ளாகை நீக்கிண்ட பிறகும்  காட்சி கொடுத்த ப்ளாக் ayy பக்கத்துல er வருது.

ஹேக் பண்ணி பொலி போட்டுரலாம்னுதான் நினைச்சேன். ஆனால் அண்ணன் "அது யாருனு கண்டுபிடிப்பா.. என் மனசுல ஒரு பேர் இருக்குன்னாரு.

நான் என்ன அண்ணா இதென்ன விட்டலாச்சார்யா படமா பேரெல்லாம் கண்டு சொல்ல வேணம்னா ஒரு துண்டு சீட்டுல எழுதி கொடுத்துருங்கோ.. நானும்   கண்டுபிடிக்கறேன். ரெண்டையும் மேட்ச் பண்ணி பார்த்துருவம்னேன்.

அண்ணனும் எழுதிக்கொடுத்தாரு. மேற்படி er வர்ர ப்ளாக்ல  சைன் இன் ஆகறாப்ல தப்பு தப்பா பாஸ் வோர்ட் அடிச்சேன். பாஸ் வோர்ட் ரிக்கவரிக்கு போனேன்.

மெயில் ஐடிய கொடுடான்னு கேட்குது . நான் என்ன ஐடிய கொடுக்க? ப்ளைண்டா அய்யர் தி கிரேட்டுனு கொடுத்தேன். எடுத்துக்கலை.

முருகேசன் அண்ணனை கேட்டுப்புட்டேன். அண்ணே இந்தாளோட மெயில் ஐடி இருக்கா? அண்ணனும் கொடுத்தாரு. அதே ஐடிய கொடுத்தேன். என்னாச்சுங்கறிங்க?

ஆட்டம் க்ளோஸ். அந்த் ஆசாமி தன்னோட மெயில் ஐடியை ரிக்கவரி மெயிலா கொடுத்து ப்ளாக் கிரியேட் பண்ணியிருக்கான்.

அந்த ஐடி யாரோடது தெரியுமா? சிவ சிவா..  ஒழுக்க சீலர்களா  நடிக்கிறவுங்க மனசுக்குள்ள இத்தனை அழுக்கா?

இதுல தான் கிரியேட் பண்ண அதே டுப்ளிக்கேட் ப்ளாக்ல தன்னோட உண்மையான ஐடென்டிட்டியோட போய் அருந்ததி நளாயினி டைப்ல ஒரு கமெண்ட் வேற.

இதோட அடங்கினா சரி. அண்ணனோட ஸ்பம் ஃபோல்டர்ல மறுபடி ஒரு கமெண்ட் ஏறினாலும் அந்த ஆசாமியோட ஃபொட்டோ வரும். ஆமா சொல்லிப்புட்டன்.

No comments:

Post a Comment