Tuesday, August 23, 2011

ஜா.ராவின் கண்ணீர் கடிதங்கள்

ஹலோ .. அய்யர் தி கிரேட் @ .கோபி கிருஷ்ணன் பேசறேன் !

சிவய சிவ ஜானகிராமன் தெரியுமோ? சித்தூர் முருகேசன் அண்ணாவின்  அனுபவஜோதிடம் வலை தளத்திலும் நிர்வாண உண்மைகள் வலைப்பூவிலும் வேறு பெயர்களிலும் - சித்தூர் முருகேசன் என்ற பெயரிலும் வந்து சாக்கடைத்தனமான கமெண்டெல்லாம் போட்டு புகழ்பெற்ற பிரகிருதி.  அண்ணன் பொருத்து பொருத்து பார்த்து மொத எழுத்து ஜா கடைசி எழுத்து ன் ங்கற க்ளூவை கொடுத்ததுமே

பத்தினி வேஷம்லாம் போட்டு விலகறேன் - என் கணக்கை எல்லாம் ஹாக் பண்ணிட்டாங்க அது இதுன்னுட்டு மாய்மாலம் பண்ணின கேஸு.ஞா வந்துடுத்தா?  அந்த ஜா.ராவோட கண்ணீர் கடிதங்களைத்தான் இந்த பதிவுல போடப்போறேன்.

என் கணக்கை ஆரோ ஹாக் பண்ணீட்டாங்கோன்னு  அண்ணா சீன் போட விரும்பமாட்டார்.  இருந்தாலும் என்னதான் ஒற்றெழுத்தை விட கேவலமான கிராக்கியா இருந்தாலும் அது எழுதின கடிதத்தை தானே எப்படி வெளியடறதுன்னு தயங்கி  என்னோட இம்சை தாங்கமுடியாம எனக்கு அனுமதி கொடுத்து பப்ளிஷ் பண்ண சொல்லியிருக்காரு.

அந்த கிராக்கி தானேதோ பெரிய அறிவாளி போல இப்போ ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லின்னுட்டு கதை பண்ணின்டிருக்கு. இந்த ஆப்ஷன்ல 100 பேரைத்தான் இன்வைட் பண்ணமுடியும்.  நம்ம ப்ளாக்ல ஆரும் அசிங்கம் பண்ணமுடியாதுங்கற தைரியத்துல இப்படி தொடர்ந்து அசிங்கம் பண்ணின்டே இருக்கு.

சாக்கடை கமெண்டுகளை  நிறுத்த சொல்லி சாம பேத தானோபாயங்களை ட்ரை பண்ணீட்டம் எதுவும் பேரலை. அதனாலதான் இந்த கடைசி முயற்சி. ( இதுவே கடைசின்னு நினைச்சுரப்போறது அந்த அராத்து - கைவசம் இன்னும் நிறைய ஆயுதங்கள் இருக்கு)

இந்த கண்ணீர் கடிதங்களை படிச்சாலே அது எப்பேர்ப்பட்ட மன அழுத்தத்துல இருக்குன்னு தெரிஞ்சுரும். அதுக்கு

தன் வறுமை - நாளுக்கு நாள் வளர்ந்துக்கிட்டு வர்ர அண்ணாவோட ரெப்புட்டேஷன்

தன் பொய்வேடம் - அசால்ட்டா உண்மைகளை உடைச்சும் அண்ணாவுக்கு கிடைக்கிற் மரியாதை

இத்யாதி மேல ஒரு பொறாமை இருந்திருக்கு.  தன் ஜாதகத்துக்கு உடனே பலன் சொல்லலைங்கற காண்டு வேற சேர்ந்துக்கிட்டுது. சின்ன பொறாமை - ஒரு இன்சல்ட் எல்லாமா சேர்ந்து பகை  பூதாகாரமா வளர்ந்து  இந்த லெவலுக்கு வந்துடுத்து.

தன்னைத்தானே கட்டுப்படுத்திக்க கூட முடியாத நிலைக்கு ஆசாமி வந்தூட்டாப்ல இருக்கு. அதனோட பித்தம் தெளியவாவது இந்த அதிர்ச்சி வைத்தியத்தை தந்துதான் ஆகனும். இது காலத்தின் கட்டாயம்.

___________________________________________________________________________________
கண்ணீர் கடிதம் : 1

மரியாதைக்குரிய முருகேசன் ஐயாவிற்கு,

வணக்கங்கள் ஐயா,

சமீப காலமாக என் வாழ்வில் நிறைய ஏமாற்றங்கள்,
துரோகங்கள் முதலியவற்றை சந்தித்து விட்டேன்..

சொந்த ஊராகிய பவானியை ( கூடுதுறை ) விட்டு இந்த எடப்பாடிக்கு குடிவந்து
சில வஞ்சகர்களின் வலையில் சிக்கி இந்த ஊருக்கு குடி வந்து ஏகப்பட்ட வேதனைகள் ... ( ஒரு சாதியை சார்ந்தவர்களே இங்கு அதிகம் என்பதால் - சாதி அடிப்படையில் இங்கும் நிம்மதியில்லை )

அருள்துறையிலும் போட்டி பொறாமைகள் ...

என்னை வேண்டுமென்றே புறக்கணிப்பதோடு என்னோடு யாரும்
தொடர்புகொள்ள விடாமலும் செய்து எனது தொழிலையும் முடக்கி விட்டார்கள்,
சில பெரிய மனிதர்கள்...

ஒரு சொற்பொழிவாளனாக, தொடர்வகுப்புகள் நடத்தும் வாத்தியாராக,
கௌரவமான வேலையில் இருந்துவிட்டு,

கிட்டத்தட்ட கடந்த ஆறு மாத காலமாக சும்மாதான் இருக்கிறேன்,

( இப்போது மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் திருவாவடுதுறை ஆதீனத்தின் பயிற்சி வகுப்புகளில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன், )  அவர்கள் தரும் ஊக்க ஊதியம் இரண்டாயிரத்தில்
போக்குவரத்து செலவு போக மொத்தம் மாதம் 1500  ரூபாய் மட்டுமே கிடைக்கிறது

சமுதாயத்தில் நிறைய மதிப்பு மரியாதையோடு வாழ்ந்துவிட்டு
இப்போது வேறு எங்கும் கைகட்டி வேலைக்கு போகவும் பிடிக்கவில்லை,,

மீறி நான் கேட்டாலும் ஐயா நீங்க போய் என்று - பேசுகிறார்கள்,

என் உண்மைநிலையை சொன்னால் சிரிக்கிறார்கள்

கிட்டத்தட்ட 5 இலட்சம் ரூபாய் கடனாகி விட்டது..  வருமானமும் இல்லை


நான் எனது மனைவியின் பெற்றோருடன் சேர்ந்து கடந்த ஒரு வருடமாக கூட்டுக்குடும்பமாக இருப்பதாலும், என் மனைவி கைத்தறி நெசவு செய்து வரும் வருமானத்திலும் எதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,


நான் உபயோகிக்கும் இந்த கம்ப்யூட்டர் ஒரு காலத்தில் நான்
அச்சகங்களுக்கு ஜாப் வொர்க் செய்து தந்தபோது வாங்கியது -
இப்போது மன அமைதிக்காக இதில் மாதம் ( AIRTEL 98 RS SCHEME )
குறைந்தபட்ச ஸ்கீமில் பிரௌஸ் செய்து வருகிறேன்,


இத்தகைய சூழலில்தான் நான் சோதிடத்தை நம்பவும் கற்கவும் துவங்கினேன்,

மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் ,, எங்கும் எதிலும் தோல்வி,
பிரச்சினைகள், குழந்தைகைளை படிக்க வைக்க முடியவில்லை.. etc...

எதற்கு இந்த சுயபுராணம் என்கிறீர்களா ?

வேறு ஒன்றும் இல்லை எனது ஜாதகத்தைப் பார்த்து நான் என்ன செய்யலாம்
என ஆலோசனை சொல்லுங்களேன் ,,,

மனைவி கைத்தறி நெய்வதால் எப்படியாவது முயற்சிசெய்து பவர்லும்
( POWERLOOM ) போடலாமா ? ஒத்து வருமா ?

இப்போது ராகு திசையிலேயே இத்தகைய வேதனை ,,,

அடுத்து எனக்கு வரும் குருதிசை
( கன்னி இலக்கினத்திற்கு - மாரகாதிபதி + பாதகாதிபதி வேறு )

அந்த குருதிசை எனக்கு மோசமாகத்தான் இருக்குமா ?
அல்லது எப்படி இருக்கும் ?

எனது பிறப்பு விபரங்கள்


பிறந்த நாள் - 13-10-1975  சென்னை

நேரம் - 5 : 25 காலை ( am ) (  திங்கட்கிழமை )

புரட்டாசி 27

உத்திராடம் 3 ஆம் பாதம் / மகர ராசி / கன்னி இலக்கினம்

ஐயா சற்று எனக்காக நேரம் ஒதுக்கி நல்ல முறையில் வழிகாட்டுங்கள்

( ஐயா சோதிடம் கணிப்பதற்கான கட்டணத்தை தங்களது செல்லுக்கு ரீசார்ஜ் செய்து அதன் வழியாக செலுத்திவிடுகிறேன் )


- சி.மா. ஜானகிராமன்

___________________________________________________________________________________________

இதற்கு அண்ணன் முருகேசன்  எழுதிய மெயில்:

ஐயா,
செல்லுக்கு ரீசார்ஜ் எல்லாம் வேண்டாம்.( ரிலையன்ஸ் காரன் அதுக்கு இதுக்குனு வெட்டி ஆவியாக்கிருவான்)  உசிதம் போல எம்.ஓ செய்யுங்கள். நிதானமா வரட்டும். அதுவும்  ரூ 250க்கு பதிலா ஜஸ்ட் ஒரு நூறு ரூபா மட்டும் அனுப்புங்க.

எஸ்.எம்

_____________________________________________________________________________________________
கண்ணீர் கடிதம்: 2

நன்றிகள் ஐயா,

நீங்கள் கணித்து தருகிறேன் என்றதால் வேறு சில முக்கிய தகவல்கைளையும் குறிப்பிடுகிறேன்,,


நான் 1998 ல் ஒரு பிராமண பெண்ணை - காதலித்து
திருமணம் செய்துகொண்டேன்

( கூடுதுறை பெருமாள் கோயில அர்ச்சகரின் பெண் )

மிக சீக்கிரத் திருமணம்....


அவர் இளமையிலிருந்தே SPINAL CARD ல் பிரச்சினை ஏற்பட்டு கொஞ்சகாலம் தான் வாழ்வார் என சொல்லப்பட்டிருந்தது,,, மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட நிலையில் நான் துணிந்து காதலித்தவரை கைவிடமாட்டேன் என திருமணம் செய்து கொண்டேன்,


6 ஆண்டுகாலம் என்னோடு வாழ்ந்தார்கள் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்கள். 

ஆனால் அந்த ஆறு ஆண்டு காலத்தின் பெரும் பகுதி நாங்கள் வாழ்ந்தது பெங்களுர் நிமான்ஸ் ஆஸ்பிட்டலில் என்று சொல்லலாம்,

( 50 சதவீத இலவச மருத்துவம் )

கலப்பு திருமணம் என்பதால் இருபக்கமும் ஆதரவில்லை...

அவர்கள் மருத்துவ செலவுக்காக பல இலட்சங்கள் கடன்பட்டேன் ,,, ஆனால் அந்த கடனை இடையில் சம்பாதித்து அடைததுவிட்டேன்,

கடந்த 17 - 06 - 2004 ல் அவர் இறைவனடி அடைந்துவிட்டார்,

எனக்கு உலகமே இருண்டது ,,,

வாழவே பிடிக்கவில்லை.. தற்கொலைக்கு முயற்சித்தேன்,, 

திடிரென என் வீட்டிற்கு வந்த நண்பர் ஒருவர் என்னை மருத்துவமனையில் சேர்ப்பித்து காப்பாற்றிவிட்டார்,


மறுமணத்திற்கு வற்புறுத்தினார்கள் ... பிடிக்கவில்லை...

ஆனால் சமுதாயம் என்னை சும்மாவிடவில்லை,

என்னை காப்பாற்றிய அந்த தோழியோடு சம்பந்தப்படுத்தி விமர்சித்தார்கள்..

ஊருக்கு பயந்து இரண்டாவது திருமணம் செய்தேன் ,,,



கொஞ்சகாலம் நன்றாக ஓடியது,,,


இப்போது மீண்டும பிரச்சினைகள்...



சோதிடம் கற்றபிறகு ஒரு உண்மை புரிந்தது ,,,


7 ல் இருந்த குரு - அதுவும் தனித்து நின்ற குருவே எனது ஏற்றத் தாழ்வுகள்
இரண்டிற்கும் காரணம் எனக் கருதத் தோன்றுகிறது,


அவன் தனித்து நிற்பதாலேயோ என்னமோ ? எனது ஆசிரியத் தொழிலிலும் போட்டி பொறாமைகளோ என சமீப காலமாக தோன்றுகிறது,

ஓகே,,

இப்போது இரண்டாவது மனைவிக்கும் ஒரு ஆண்குழந்தை ,,,

இரண்டையும் கரைசேர்க்க வேண்டும் ,,,

கணித்து சொல்லுங்கள் ஐயா,,,

தங்கள் நேரத்தை திருடியிருந்தால் மன்னிக்கவும் ஐயா,,


--
அன்பன்,
சிவ.சி.மா. ஜானகிராமன்

_____________________________________________________________________________________________________

கண்ணீர் கடிதம்: 3
அன்புடன் வணக்கம்,

திருவாளர் முருகேசன் ஐயா - தங்களோடு பேச விரும்புகிறேன் - தங்களது மொபைல் நெம்பர் தரவும் ....


எந்நேரமாயினும் எம்மை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்- நான் சாட்டில் அல்லது மெயிலில் தங்களோடு தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
--
அன்பன்,
சிவ.சி.மா. ஜானகிராமன்

_________________________________________________________________________________________________
இன்னும் ஒரு  போலி கண்ணீர் கடிதம்:
( இது வேறு ஒரு நண்பருக்கு எழுதப்பட்டு அண்ணனுக்கு ஃபார்வார்ட் செய்யப்பட்ட மெயில்)

சிவசிவ

இன்றைய பதிவை இணைக்க அந்த தமிழ் 10 ல் சென்ற நான்
அங்கு முகப்பில் இருந்த முருகேசன் சாரை பற்றிய பதிவுகளை
பார்த்து அதிர்ச்சியடைந்து - யார் இப்படி
செய்தார்கள் என பார்ப்பதற்காக கிளிக்கிய போது -
அதில் ஐயர் தி கிரேட் என்று
ஒரு முகவரியும் மற்றும் தங்களுடைய முத்துச்சிதறல்
பிளாக்ஸ்பாட் என்ற முகவரியும்
இருந்ததைப் பார்த்து பதறிப் போய் தான் தங்களோடு போனில்
பேசினேன்.

இதோ அந்த லிங்க்

http://images.tamil10.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF



http://ayyerthegreat.blogspot.com/2011/05/blog-post.html


ஆனால் அதிர்ச்சி தந்துவிட்டீட்டீர்கள்.


நான் வணங்கும் எல்லாம்வல்ல சிவபரம்பொருளின்
மீது ஆணையாக இத்தகைய இழிசெயல்களில் நான்
எப்போதும் ஈடுபடமாட்டேன் தோழரே.


ஒருவரை பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்வனே
தவிர அவரை பற்றி தவறாக சொல்லமாட்டேன்.
இதுவே எமது இயல்பு..


ஏற்கனவே வாழ்வில் நொந்து போயிருக்கும் எனக்கு இத்தகவல்
மேலும் அதிர்ச்சியே ஆகும்.


அந்த சீனிவாச ஐயங்கார் என்பவர் மே மாதமே எனக்கு
முருகேசன் சாரைப் பற்றிய தவறான செய்தியை எனது பிளாகரில்
கமண்ட் செய்திருந்தார் - அதை நான் வெளியிடாமல் - அந்த
பெயரை வைத்து அவரது தளத்தை கண்டறிந்து அங்கு
சென்று பார்த்து அவரது பிராமின் என்ற
தளத்தில் - எனது கருத்தை சொல்லிவிட்டு வந்தேன்..


இதுபோலவே புரட்சி மணியாரின் - பிளாகரிலும் அவர்
கமண்ட் செய்திருந்தார் - அது பிரசுரம் கூட ஆகியிருந்தது.


மற்றபடி எனக்கும் இந்த அற்பத்தனத்திற்கும் எள்ளளவு கூட
சம்பந்தம் கிடையாது..

எதையும் வெளிப்படையாக பேசும் எனது குணமே
இப்படி தங்களை நினைக்க வைத்ததோ ?

அனுபவசோதிடத்தில் முருகேசன் சார் எழுதும் பதிவுகளில்
நான் வெளிப்படையாகவே எனது கருத்துக்களை சொல்லியிருப்பேனே ?
அப்படி இருந்தும் என்னை இதில் சம்பந்தப்படுத்தியது
எனக்கு மிகமிக மன வேதனை நண்பரே..

எனக்கு எனது ஜாதகத்தையெல்லாம் பார்த்து ஆலோசனை
சொன்னவர் திரு. முருகேசன் சார்...

நான் வாழ்வில் கடைத்தேற உதவியவருக்கா நான்
கேடு நினைப்பேன் ?


எல்லாம் என் போதாத நேரம் .. என் செய்வது ?


ஆனால் ஒன்றை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்


என் தாயின் மீது ஆணையாக,
நான் வணங்கும் கடவுள் மீது ஆணையாக,
எனது குழந்தைகள் மீது ஆணையாக,
என் மனைவி மீது ஆணையாக,


இந்த இழி செயலை நான் செய்யவில்லை.





நன்றி..


மிகுந்த மனவருத்தத்துடன்.



அன்பன்,
சிவ.சி.மா. ஜானகிராமன்

Sunday, July 17, 2011

அனுபவ ஜோதிடம்: கருப்பு ஆடு இதோ!

அனுபவ ஜோதிடம் , நிர்வாண உண்மைகள் வாசகர்களுக்கு இந்த அய்யரை  நினைவிருக்கோ இல்லையோ.

பூசையறையில் பேண்டு வச்சாப்ல ஒரு அச்சு பிச்சு அனானியாவும் - - விதவிதமான பொய் பேர்லயும் கடைசியில  முருகேசன் அண்ணன் பேர்லயும்   கமெண்ட் போட்டு   அலப்பறை பண்ணின்டிருந்ததே அந்த கருப்பு ஆட்டை கண்டே புடிச்சுட்டன்.

அண்ணன் கிட்டே சொன்னா "கண்டுபிடிச்சு ஊருக்கு சொல்லி என்ன ஆகப்போகுது ? ஏற்கெனவே லட்சங்கள்ள கடன் .. அந்த மன்சன் செய்ற தொழிலுக்கு இதெல்லாம் ஊருக்கு தெரிஞ்சா பொழப்பு நாறிடும். நாம கண்டுபிடிச்சுட்டோம்னு சொன்னாலே போதும் அடங்கிரும்"னு தத்துவம் பேசினாரு.

இந்த கான்வர்சேஷன்லாம் அண்ணனோட ஆத்துல நடக்குது. அண்ணன் அப்ப ப்ளாகரையும் - அனுபவஜோதிடத்தையும் திறந்து வச்சிருந்தாரு.  நான் வந்ததும் சூடா காஃபி கொடுத்து தம் போட கம்ப்யூட்டரை விட்டு எழுந்தாரு. சைக்கிள் கேப்ல கண்ணு விட்டேன்.  பார்த்தா ஸ்பம்ல ஒத்தெழுத்து நாத்தத்துல கமெண்டுகள். எனக்கு நவத்வாரத்துலருந்தும் புகை வ்ந்துட்டுது.

"இல்லண்ணே அவன் திருந்தமாட்டான். ஒரே ஒரு பதிவு நான் போடறேன்" னு கேட்டேன். அண்ணன் ஒத்துக்கலை.

அவனாலே எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. பி.ஆர்.ஓ கணக்கா பப்ளிசிட்டிதான் தரான். என்னால அவனுக்கு எந்த நஷ்டமும் வரக்கூடாதுன்னு அடிச்சு சொல்லிட்டாரு.

தன் இதயத்துலயே  இந்த பாவிக்கு இடம் கொடுத்த அண்ணன் சைட்ல இடம் கேட்டா  அனுமதிக்கலை. எனக்கு மனசு கேட்கலை. அதனாலதான் அண்ணன் வஞ்சாலும் பரவால்லைனு இந்த பதிவை போடறேன்.

அந்தாளு யாருன்னு  கண்டு பிடிச்சாச்சுன்னு சொன்னா அவன்  நம்பலை போல. அந்த ப்ராசஸை சொல்றேன் பாருங்க.

நான் வச்சிருந்து அண்ணனை திட்டி தீர்த்த ப்ளாக் பேரு ayyarthegreat ( நன்னா கவனிங்கோ ayy பக்கத்துல ar வரும். ஆனால் நான் என் ப்ளாகை நீக்கிண்ட பிறகும்  காட்சி கொடுத்த ப்ளாக் ayy பக்கத்துல er வருது.

ஹேக் பண்ணி பொலி போட்டுரலாம்னுதான் நினைச்சேன். ஆனால் அண்ணன் "அது யாருனு கண்டுபிடிப்பா.. என் மனசுல ஒரு பேர் இருக்குன்னாரு.

நான் என்ன அண்ணா இதென்ன விட்டலாச்சார்யா படமா பேரெல்லாம் கண்டு சொல்ல வேணம்னா ஒரு துண்டு சீட்டுல எழுதி கொடுத்துருங்கோ.. நானும்   கண்டுபிடிக்கறேன். ரெண்டையும் மேட்ச் பண்ணி பார்த்துருவம்னேன்.

அண்ணனும் எழுதிக்கொடுத்தாரு. மேற்படி er வர்ர ப்ளாக்ல  சைன் இன் ஆகறாப்ல தப்பு தப்பா பாஸ் வோர்ட் அடிச்சேன். பாஸ் வோர்ட் ரிக்கவரிக்கு போனேன்.

மெயில் ஐடிய கொடுடான்னு கேட்குது . நான் என்ன ஐடிய கொடுக்க? ப்ளைண்டா அய்யர் தி கிரேட்டுனு கொடுத்தேன். எடுத்துக்கலை.

முருகேசன் அண்ணனை கேட்டுப்புட்டேன். அண்ணே இந்தாளோட மெயில் ஐடி இருக்கா? அண்ணனும் கொடுத்தாரு. அதே ஐடிய கொடுத்தேன். என்னாச்சுங்கறிங்க?

ஆட்டம் க்ளோஸ். அந்த் ஆசாமி தன்னோட மெயில் ஐடியை ரிக்கவரி மெயிலா கொடுத்து ப்ளாக் கிரியேட் பண்ணியிருக்கான்.

அந்த ஐடி யாரோடது தெரியுமா? சிவ சிவா..  ஒழுக்க சீலர்களா  நடிக்கிறவுங்க மனசுக்குள்ள இத்தனை அழுக்கா?

இதுல தான் கிரியேட் பண்ண அதே டுப்ளிக்கேட் ப்ளாக்ல தன்னோட உண்மையான ஐடென்டிட்டியோட போய் அருந்ததி நளாயினி டைப்ல ஒரு கமெண்ட் வேற.

இதோட அடங்கினா சரி. அண்ணனோட ஸ்பம் ஃபோல்டர்ல மறுபடி ஒரு கமெண்ட் ஏறினாலும் அந்த ஆசாமியோட ஃபொட்டோ வரும். ஆமா சொல்லிப்புட்டன்.